தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

Raghavendran

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரது வீடுகளுக்கு சனிக்கிழமை இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரது வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கடலூரைச் சேர்ந்த பிரதீப் என்ற பெயரில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய தீவிர விசாரணை மற்றும் சோதனைக்குப் பின்னர் முதல்வர் வீட்டுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வீட்டிலும் காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். இதுகுறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கடலூரைச் சேர்ந்த புவனேஷ் என்பவர் என விசாரணையில் தெரியவந்தது. 

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT