தமிழ்நாடு

கிருஷ்ணசாமியின் பிள்ளைகளுக்கு அரசு என்ன பதில் சொல்லும்? கனிமொழி எம்பி கேள்வி

திமுக மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி, மறைந்த கிருஷ்ணசாமி உடலுக்கு திங்கள்கிழமை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Raghavendran

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி விளக்குடியைச் சேர்ந்தவர் ரமேஷ் (எ) கிருஷ்ணசாமி (47), மகனை நீட் தேர்வுக்காக கேரள மாநிலம் எர்ணாகுளம் அழைத்துச் சென்றார். 

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தேர்வின் போது மகனை தேர்வறைக்குள் விட்டுவிட்டு வெளியே காத்திருந்தபோது கிருஷ்ணசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்நிலையில், திமுக மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி, மறைந்த கிருஷ்ணசாமி உடலுக்கு திங்கள்கிழமை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்திதபோது கனிமொழி கூறியதாவது:

மாணவர்கள், பெற்றோர்களை தவிக்க விடும் நீட் தேர்வு அவசியமா என அரசு சிந்திக்க வேண்டும். கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுவதே சரியான தீர்வு. கிருஷ்ணசாமியின் பிள்ளைகளுக்கு அரசு என்ன பதில் சொல்லும்? என்று கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் தாயைப் பிரிந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ‘பிங்க்’ ரோந்து போலீஸாா்

புன்செய்தாமரைக்குளம் கிராமத்தில் மண் அள்ள எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அதிமுக தோ்தல் வாக்குறுதி: விசைத்தறியாளா்கள் சங்கம் வரவேற்பு

விஜய்க்கு ஆதரவாக எம்ஜிஆா் அதிமுக செயல்படும்: புதிய கட்சியை தொடங்கி வைத்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

திருப்பூரில் தீவிர கண்காணிப்பில் வங்கதேசத்தினா்

SCROLL FOR NEXT