போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று ஜாக்டோ - ஜியோ அமைப்புக்கு அமைச்சர் ஜெயகுமார் திங்கள்கிழமை வேண்டுகோள் வைத்தார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பு நாளை சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார் ஜாக்டோ - ஜியோ அமைப்புக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். ஆக்கபூர்வமாக செயல்பட்டு மக்கள் நலனுக்காக சிறப்பான நிர்வாகத்தை வழங்க அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.