தமிழ்நாடு

ஜெயலலிதா அறிவித்த திட்டங்களில் 95% நிறைவேற்றப்பட்டுள்ளது: முதல்வர் பழனிசாமி 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களில் 95% நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி  பேசியுள்ளார்.

DIN

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களில் 95% நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி  பேசியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திங்கள் மாலை துவங்கியது. இந்த கூட்டத்தில் அதிமுக வழிகாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களில் 95% நிறைவேற்றப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி  பேசியுள்ளார்.

கூட்டத்தில் அவர் கூறியதாவது:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்த திட்டங்களில் 95% திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது.

இருசக்கர வாகனத்தின் இரண்டு சக்கரங்கள் போல கட்சியும் ஆட்சியும் அமைந்துள்ளது.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT