தமிழ்நாடு

தூத்துக்குடி அண்ணா நகரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: இளைஞர் பலி; 5 பேர் காயம்

DIN


தூத்துக்குடி அண்ணா நகரில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் இன்று மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். 5 பேர் காயமடைந்தனர்.

அண்ணா நகர் பகுதியில் காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய காவல்துறையினர், துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காளியப்பன் (22) என்ற இளைஞர் உயிரிந்துள்ளார். மேலும் 5 பேர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களின் கல்வீச்சு சம்பவத்தால் காவலர்கள் இரண்டு பேரும் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூடு மற்றும் உயிரிழப்பு சம்பவங்களால், தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் பலத்தக் காற்று: வாகன ஓட்டிகள் அவதி

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

SCROLL FOR NEXT