தமிழ்நாடு

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: குறையும் மழை

DIN

சென்னை: தெற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்துள்ளதால் மழையளவு குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.    

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையஅதிகாரி புதனன்று தெரிவித்துள்ளதாவது:

தெற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. 

இதன் காரணமாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி கடலோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.   

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் லேசான மழை இருக்கக் கூடும், 

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரில் ஆங்காங்கே மிதமான மழை பெய்யக் கூடும், 

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT