தமிழ்நாடு

6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று விடுமுறை

DIN

கஜா புயலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுள்ளது. கஜா புயல் கரையைக் கடக்கும் போது மேற்கண்ட பகுதிகளில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் ஒத்திவைப்பு
அண்ணா பல்கலைக் கழக இணைப்புக் கல்லூரிகள், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், மற்றும் புதுவை மத்திய பல்கலைக்கழகங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 
பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு: புயல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பாலிடெக்னிக்குகளுக்கான வியாழக்கிழமைத் தேர்வுகள் நவம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இப்போது வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த டிப்ளமோ தேர்வுகளை நவம்பர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மறு தேதி அறிவிப்பு: புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் வியாழக்கிழமை நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் நவம்பர் 22-ஆம் தேதி நடத்தப்படும். இணைப்புக் கல்லூரிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த தேர்வுகள் வரும் டிச. 13-ஆம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்
கழகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT