தமிழ்நாடு

கஜா நிவாரணம்: ஒரு மாத ஊதியத்தை வழங்கிய ஆளுநர் பன்வாரிலால் 

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளார். 

DIN

சென்னை: கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளார். 

தமிழகத்தை கடந்த 16ந்தேதி தாக்கிய கஜா புயலினால் டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும்  நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்தன.

பல லட்சம் தென்னை, பலா மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன.  வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் நாசமானது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. இதற்காக மத்திய அரசிடம் தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி  நிதியுதவி கூறியுள்ளது. பின்னர் மத்திய குழு ஒன்று 3 நாட்களாக புயல் பாதித்த பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்தது.   

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக நிதி வழங்கி வருகிறார்கள். தனியார் நிறுவனங்களும், பிரமுகர்களும் நிவாரண நிதி அளித்து வருகிறார்கள்.  அதிமுக மற்றும் திமுக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளித்தனர்.

இந்நிலையில் கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிவாங்கி!

SCROLL FOR NEXT