முகப்பு
தமிழ்நாடு

மேக்கேதாட்டுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 9 அக்டோபர் 2018, 1:37 am IST
பகிர்:


காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என மத்திய அரசு உடனே அறிவித்திருக்க வேண்டும். அப்படி அறிவிக்காதது கண்டனத்துக்குரியது. மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். எனவே, இந்த விவகாரத்தில் மறைமுகமாகவோ, நேரடியாகவோ கர்நாடக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும் கர்நாடக அரசு கட்டுப்பட்டு, 4 மாநிலங்களுக்கும் தண்ணீர் கிடைக்கவும், நல்லுறவுக்கும் வழி வகுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.