தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மூன்று நிரந்தர நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை 

DIN

புது தில்லி: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதலாக மூன்று நிரந்தர நீதிபதிகளை உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் ஆர்.எம்.டி டீகா ராமன், என்.சதீஷ் குமார் மற்றும் என்.சேஷசாயீ ஆகிய மூவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. 

நவம்பர் 2016 -இல் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிளாக நியமிக்கப்பட்ட இவர்கள் மூவரின் பதவிக்காலமானது வரும் நவம்பர் 15-ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது. 

இவர்கள் மூவரின் பெயர்களும் ஒரு மனதாக கொலீஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT