முகப்பு
தமிழ்நாடு

குரூப் 2 பணியிடங்கள்: விண்ணப்பிக்க செப்.9 கடைசி

குரூப் 2 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 9 -ஆம் தேதி கடைசியாகும். 

Updated On : 4 செப்டம்பர், 2018 at 2:23 AM
பகிர்:

குரூப் 2 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 9 -ஆம் தேதி கடைசியாகும். 
சமூக பாதுகாப்புத் துறை, உதவி தொழிலாளர் நலத் துறை அதிகாரி, சார் -பதிவாளர் உள்ளிட்ட குரூப் 2 தொகுதியில் 1,199 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் 10 -ஆம் தேதி வெளியிட்டது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 9 -ஆம் தேதி கடைசி நாளாகும். இதன்பின், இந்தியன் வங்கி அல்லது பாரத ஸ்டேட் வங்கி மூலமாக விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வரும் 11 -ஆம் தேதி கடைசியாகும். குரூப் 2 -க்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நவம்பர் 11 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.