தமிழ்நாடு

சிலைக் கடத்தல் வழக்கை விசாரிக்க சிபிஐ மறுப்பு: விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

DIN


சென்னை: சிலைக் கடத்தல் வழக்கை விசாரிக்க சிபிஐ மறுத்துள்ளது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியது தொடர்பாக பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் சிபிஐ இன்று தாக்கல் செய்த பதில்  மனுவில், சிலைக் கடத்தல் வழக்கை விசாரிக்க முடியாது என தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், சிபிஐ மறுத்ததற்கான காரணம் குறித்து ஒரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ தரப்பில், ஆள்பற்றாக்குறை காரணமாக வழக்கை விசாரிக்க இயலாது என்றும், எங்கள் தரப்பில் இருந்து தேவைப்படும் உதவிகள் செய்யத் தயார் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT