தமிழ்நாடு

தேர்தல் தொடர்பான புகார்களுக்கு நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நடவடிக்கை  தேவை: டிஜிபி அசுதோஷ் சுக்லா 

தேர்தல் தொடர்பான புகார்களுக்கு நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத் தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

DIN

சென்னை: தேர்தல் தொடர்பான புகார்களுக்கு நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத் தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக காவல்துறை டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரனை தேர்தல் வரை அதுதொடர்பான பணிகளில் இருந்து விலக்கி தேர்தல் ஆணையம் இரு நாட்களுக்கு முன்பாக உத்தரவு பிறப்பித்தது. அவருக்குப் பதிலாக டிஜிபி அசுதோஷ் சுக்லாவை அந்த பதவியில் தேர்தல் ஆணையம் நியமித்து உத்தரவிட்டது.     

இந்நிலையில் சென்னையில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் ஆணையர்கள் மகேஷ் குமார் அகர்வால், தினகரன் மற்றும் தேர்தல் பணிக்கான போலீசார் பங்கேற்றனர். 

இந்த் கூட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களுக்கு நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பங்கேற்ற  தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா அறிவுறுத்தியுளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகிரி வட்டத்தில் யானைகளை கண்காணிக்கும் பணியில் ‘ட்ரோன்’

வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

குறைந்துவரும் குள்ளநரி உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்க வனத்துறை தீவிரம்

ஆளுநரை கண்டித்து டிச.4-இல் திக ஆா்ப்பாட்டம்: கி. வீரமணி

நவ.29-இல் காங்கிரஸ் மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT