தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
வடமேற்கு வங்க கடலில் உருவாகி இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்யக் கூடும். தென்மேற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதியில் மணிக்கு 40 கி.மீட்டர் முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். அதிகபட்சமாக நீலகிரியின் அவலாஞ்சி பகுதியில் 41 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது என்றார்.
இதனிடையே கடலூர், பாம்பன், தூத்துக்குடி, வ.உ.சி. துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.