தமிழ்நாடு

பா.ஜ.கவின் போக்கை மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்: சிபிஎஸ்சி விவகாரத்தில் ஸ்டாலின் கண்டனம் 

DIN

சென்னை: பா.ஜ.க அரசின் போக்கை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று சிபிஎஸ்சி தேர்வுக் கட்டண உயர்வு விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்சியில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் எஸ்.சி / எஸ்.டி பிரிவு மாணவர்களுக்கு கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பினை வெளியிட்டது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பா.ஜ.க அரசின் போக்கை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டாரகள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

CBSE தேர்வுக் கட்டணத்தை SC/ST மாணவர்களுக்கு உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது! #NEET, #NEXT, #neweducationpolicy வழியில் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தி சமூகநீதியை நீக்கத் துடிக்கும் பா.ஜ.க அரசின் போக்கை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை உணர்ந்து உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT