தமிழ்நாடு

கல்லூரிக்கு மது அருந்திச் சென்ற விவகாரம்: நீதிமன்ற உத்தரவின்படி காமராஜர் நினைவு இல்லத்தை தூய்மைப்படுத்தும் மாணவர்கள்

DIN

உயர்நீதிமன்றக் கிளை உத்தரவின்படி, விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தை மாணவர்கள் தூய்மைப்படுத்தி வருகின்றனர். 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 8 பேர் கல்லூரிக்கு மதுபோதையில் வந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் அவர்கள் 8 பேரையும் கல்லூரியில் தொடர்ந்து படிக்க அனுமதியளிக்கவில்லை. இந்நிலையில், கல்வி கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு தங்களின் மூன்றாம் ஆண்டு படிப்பை தொடர்வதற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதியளிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட 8 மாணவர்களும் மனு தாக்கல் செய்திருந்தனர். 

இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கல்லூரி மாணவர்கள் 8 பேரும் சுதந்திரதினமான ஆகஸ்ட் 15-இல் விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்ய வேண்டும். இதையடுத்து அங்கு மது ஒழிப்பு குறித்த 16 வாசகங்களை முழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், காமராஜர் நினைவு இல்லத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு தேவையான உதவிகளை அவர்கள் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். 

மேலும் மாணவர்கள் 8 பேரையும் விருதுநகர் நகர் போலீஸார் கண்காணிக்க வேண்டும்.  இதையடுத்து கல்லூரி நிர்வாகம் மாணவர்களை கல்லூரியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டவுடன், அதனை ஆகஸ்ட் 19 ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில் உயர்நீதிமன்றக் கிளை உத்தரவின்படி, விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தை மாணவர்கள் 8 பேரும் இன்று தூய்மைப்படுத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT