சென்னை: வரும் ஆகஸ்ட் 24 இல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று, கட்சிப் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திங்களன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வரும் 21-ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமானது தேதி மாற்றப்பட்டு, வரும் 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்' என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.