தமிழ்நாடு

பரோலை நீட்டிக்க கோரி நளினி தொடர்ந்த மனு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பரோலை நீட்டிக்க கோரி நளினி தொடர்ந்த மனு தொடர்பாக நாளை மறுநாள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

DIN

பரோலை நீட்டிக்க கோரி நளினி தொடர்ந்த மனு தொடர்பாக நாளை மறுநாள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரது மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக 30 நாள்கள் பரோலில் கடந்த மாதம் 25-ஆம் தேதி வெளியே வந்தார். 

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலர் சிங்கராயர் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் மகள் திருமண ஏற்பாடுகளை முடிக்க முடியாததால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக நாளை மறுநாள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

SCROLL FOR NEXT