தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினரால் கைது 

DIN

புதுக்கோட்டை: தமிழக மீனவர்கள் நால்வர் புதனன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த  நான்கு மீனவர்கள், புதனன்று இலங்கையின் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களது நாட்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களும் இலங்கையில் உள்ள காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டதாக, மீன்வளத் துறை உதவி இயக்குநர் குமரேசன் தெரிவித்தார். 

கடந்த இரண்டு நாட்களில்  இலங்கை கடற்படையினரால் நடக்கும் இரண்டாவது கைது நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT