கோவையில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
கோயம்புத்தூரில் 5 இடங்களில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோயம்புத்தூரில் 5 இடங்களில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கோவை, ராமேசுவரம் உள்ளிட்டப் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கோயம்புத்தூரில் 5 இடங்களில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இன்று காலை 5 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உக்கடம், கோட்டைமேடு, பிலால் எஸ்டேட், ஜிஎம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், காவல் துறையினரின் உதவியுடன் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி முகமது யாசின், சனபர் அலி, சதாம் உசேன், உமர் பாரூக், ஜமீசா முபின் ஆகிய 5 பேரின் வீடுகளில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.