சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஈரோட்டில் மகப்பேறு பரிசோதனை மையம் மூடல்
சூரிய கிரகணம் நிகழும்போது, கர்ப்பிணிகள் வெளியில் வரக்கூடாது என்பதால் ஈரோட்டில் மகப்பேறு பரிசோதனை மையம் ஒன்று மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முழு சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதுமே பல்வேறு மாவட்டங்களில் சூரிய கிரகணத்தை காண தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தொலைநோக்கி மற்றும் சிறப்பு கண்ணாடி மூலமாக பொது மக்கள், சிறுவர்கள் சூரிய கிரகணத்தினை கண்டு மகிழ்ந்தனர்.
இந்நிலையில், மக்களிடையே சூரிய கிரகணம் பற்றி பல்வேறு நம்பிக்கைகள் நிலவுகின்றன. கிரகணத்தின்போது, கர்ப்பிணிகள் வெளியில் வரக்கூடாது என்று கூறப்படுவதால் ஈரோட்டில் மகப்பேறு பரிசோதனை மையம் ஒன்று மூடப்பட்டுள்ளது.