தமிழ்நாடு

மத்திய அரசை தம்பிதுரை விமர்சித்ததில் தவறில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

DIN

மத்திய அரசை தம்பிதுரை விமர்சித்ததில் தவறில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  

மக்களவையில் திங்கள்கிழமை இடைக்கால பட்ஜெட் உரை மீதான பொது விவாதத்தில் பங்கேற்று அவர் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ஜிஎஸ்டியை தங்களது மூளையில் உதித்த திட்டமாக காங்கிரஸும், பாஜகவும் கூறுகின்றன. இதன் மூலம் மாநில அரசின் அதிகாரம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டியை பொருத்தமட்டில் பணம் மத்திய அரசிடம் உள்ளது. அதைப் பெறுவதற்கு மாநில அரசுகள் கெஞ்சும் நிலை உள்ளது என கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தம்பிதுரை பேசியது தனிப்பட்ட கருத்தா? அரசின் கருத்தா? என தமிழக சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ பொன்முடி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மத்திய பாஜக அரசை விமர்சித்து மக்களவையில் தம்பிதுரை பேசியதில் தவறில்லை. ஜிஎஸ்டியால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தம்பிதுரை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். ஒரு திட்டத்தால் மாநிலங்கள் பாதிக்கப்படும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மாநில அரசின் கடமை என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT