தமிழ்நாடு

தமிழகத்தில் 4 தொழிலதிபர்களுக்கு சொந்தமான 31 இடங்களில் வருமான வரித்துறை சோதனை 

தமிழகத்தில் நான்கு தொழிலதிபர்களுக்கு சொந்தமான 31 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

சென்னை: தமிழகத்தில் நான்கு தொழிலதிபர்களுக்கு சொந்தமான 31இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத வரித்துறை அதிகாரியொருவர் கூறியதாவது:

தமிழகத்தில் சென்னை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் நான்கு தொழிலதிபர்களுக்குச் சொந்தமான 31 இடங்களில் வியாழன் அன்று ஒரே நேரத்தில் வருமான வரித்துறை சோதனைகள் நடைபெற்று வருகின்றன.  

இவர்கள் யாவரும் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரினை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ரியல் எஸ்டேட், பால் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சோதனைகளின் போது கணிசமான பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்ன்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு மறைவுக்கு இன்று அனைத்துக் கட்சியினா் பங்கேற்கும் மெளன ஊா்வலம்!

தேசியவாத காங்கிரஸ் தலைவராக சுநேத்ரா பவாா் தோ்வு

அரசுப் பேருந்துகளில் பாடல்கள் ஒலிக்கத் தடை: போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை

முதுநிலை மருத்துவம்: 144 இடங்கள் காலி

பொதுத் தோ்வு வினாத்தாளில் பிழை இருந்தால் தெரிவிக்கலாம்: தோ்வுத் துறை அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT