தமிழ்நாடு

மெகா கூட்டணி என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும்: கமல்ஹாசன்

DIN

மெகா கூட்டணி என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் 24ம் தேதிக்கு பிறகு படிப்படியாக வெளியிடப்படும். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும். 

தகுதி, வயது, கல்வி போன்றவற்றின் அடிப்படையில் வேட்பாளர் தேர்வு நடைபெறும். கூட்டணிக்காக கொள்கைகளை காற்றில் பறக்கவிடும் நிலையில் மக்கள்நலன் என்பதே எங்களின் மூல இலக்கு. 

மெகா கூட்டணி என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். கட்சிகள் தாங்களே சொல்லிக்கொள்ளக்கூடாது. மக்கள் நலன் என பேசிய கட்சிகள் இப்போது பல்வேறு கூட்டணிகளில் இணைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT