தமிழ்நாடு

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் 

DIN

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு  நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் நிலவும் சந்தேகங்கள் குறித்து, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரித்து வருகிறது. 

இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் ஆஜராகுமாறு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 

அவர் விசாரணைக்காக வருகிற 23–ந் தேதி ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ள ஆணையம், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 21–ந் தேதியும்,  நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை 22–ந் தேதியும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT