தமிழ்நாடு

தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்: வைகோ திட்டவட்டம்

மதுரை எய்மஸ் மருத்துவமனைக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அடிக்கல் நாட்ட வரும் பிரதமர் மோடிக்கு மதிமுக சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும் என்று வைகோ தெரிவித்துள்ளார். 

DIN


மதுரை எய்மஸ் மருத்துவமனைக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அடிக்கல் நாட்ட வரும் பிரதமர் மோடிக்கு மதிமுக சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும் என்று வைகோ தெரிவித்துள்ளார். 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். அவர் வரும்போது மதிமுக சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

"நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், முல்லைப் பெரியாறு மற்றும் மேக்கேதாட்டு போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அனுமதி வழங்குகிறது. இந்த திட்டங்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சியை கொடுக்கும். ஆனால், தமிழகத்தை அழித்துவிடும். 

அதனால், பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும் போது மதிமுக நிர்வாகிகள் கருப்புக் கொடி ஏந்துவார்கள். இந்த போராட்டம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எதிரானது அல்ல. தமிழக நலனை புறக்கணித்த காரணத்துக்காக மோடிக்கும், அவருடைய அரசுக்கும் எதிரானது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT