தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கடந்த ஆண்டு 17 பேரை பலி கொண்ட ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் தற்போது மீண்டும் அம்மாநிலத்தை தாக்கி உள்ளது. கல்லூரி மாணவர் ஒருவருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நோயை கட்டுப்படுத்த மத்திய குழு கேரளா விரைந்து தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள மாணவருடன் நெருக்கமாக பழகிய பிற மாணவர்கள், மற்றும் உறவினர்கள் என 300 பேர் மருத்துவ குழுவின் தீவிர கண்காணிப்பின் கீழ் உள்ளனர். மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் மீண்டும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதையடுத்து தமிழக எல்லை பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு தனது முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் துவக்கமாக தமிழக எல்லை பகுதிகள், அங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் சிகிச்சை விபரங்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதனன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. பழம்தின்னி வௌவால்கள் மூலம் நிபா வைரஸ் பரவுவதால் பழங்களை மக்கள் நன்கு கழுவிய பின்னரே சாப்பிடவேண்டும்.
தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. கேரள எல்லையில் உள்ள 7 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கவனத்துடன் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.