சென்னை: ஒட்டப்பிடாரம் தொகுதிதயில் அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜன் வெற்றியை எதிர்த்து கிருஷ்ணசாமி தொடர்ந்த மனுவை திரும்பப் பெற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இடைத் தேர்தலுக்குத் தடையாக இருந்த மனுவைத் திரும்பப் பெற டாக்டர் கிருஷ்ணசாமிக்கு அனுமதி வழங்கி, மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்.
வழக்கு தள்ளுபடி ஆனதால், ஒட்டப்பிடாரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு இருந்த தடை நீங்கியுள்ளது.
இதனால், வரும் ஏப்ரல் 18ம் தேதி மற்ற தொகுதிகளோடு ஒட்டப்பிடாரம் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.