தமிழ்நாடு

அதிமுகவின் எதிர்கால நலன் கருதி ஆதரவு தருகிறேன்.. சொல்லியிருப்பது யார் தெரியுமா?

DIN


சென்னை: மக்களவை மற்றும் இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவளிப்பதாக தலைவர் ஜெ. தீபா அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெ. தீபா, அதிமுகவின் எதிர்கால நலன், வெற்றியைக் கருத்தில் கொண்டு அக்கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும், மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் அது அதிமுக தொண்டர்களின் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
 
அதிமுகவோடு இணையும் பேச்சுவார்த்தை தேர்தலுக்குப் பிறகு தொடரும், தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுடன் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இணைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

அதிமுகவின் வெற்றிக்காக எனது கட்சி தொண்டர்கள் , நிர்வாகிகள் ஈடுபடுவார்கள். அதிமுக தலைமை கேட்டுக் கொண்டால் அக்கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்றும் தீபா அறிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT