தமிழ்நாடு

பெரியகுளம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம்

DIN


பெரியகுளம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளராக எம்.மயில்வேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர்  வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
தமிழக சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் பெரியகுளம் (தனி) தொகுதிக்கு அதிமுக சார்பில் வேட்பாளராக முருகன் அறிவிக்கப்பட்டிருந்தார். அவருக்குப் பதிலாக, அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளராக தேனி-அல்லி நகர ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் எம்.மயில்வேல் நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றம் ஏன்?: பெரியகுளம் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முருகன்,  அண்மையில் அங்கு நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அவர் பிரசாரத்திலும் இதுவரை கலந்து கொள்ளவில்லை எனப் புகார் கூறப்பட்டது. இந்த நிலையில், பெரியகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT