தமிழ்நாடு

தமிழகத்தில் கடும் வெப்பத்துடன் வீசப்போகும் அனல் காற்று:  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! 

தமிழகத்தில் கடும் வெப்பத்துடன் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

DIN

சென்னை: தமிழகத்தில் கடும் வெப்பத்துடன் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் ‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் காலம் தமிழகத்தில் வெள்ளியன்று துவங்கியது.

கத்திரி வெயில் காலத்தின் முதல் நாளான சனிக்கிழமையன்று வெயில் அவ்வளவாக இல்லாவிட்டாலும், நல்ல  அனல் காற்று வீசியது.  இரண்டாவது நாளான ஞாயிறன்று அக்கினி நட்சத்திர வெயில் காலையில் இருந்தே மிகவும் கடுமையாக இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் கடும் வெப்பத்துடன் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் கடும் வெப்பத்துடன் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது.  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யவும்  வாய்ப்பு உள்ளது.

சென்னையில் 100 டிகிரி வரை வெப்பநிலை காணப்படும்.

சென்னையை பொறுத்தவரை வானம் சிறிது மேகமூட்டத்துடன் காணப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

SCROLL FOR NEXT