பள்ளி வாகனங்களில் சிசிடிவி பொருத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி வாகனங்களில் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கருவி கட்டாயம் பொருத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புரசைவாக்கம் கோபி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.