தமிழ்நாடு

சென்னையில் நவம்பர் மாதம் வரை குடிநீர் வினியோகத்தில் பிரச்சனை இல்லை: அமைச்சர் வேலுமணி 

DIN

சென்னை: சென்னையில் வரும் நவம்பர் மாதம் வரை குடிநீரைத் தடையின்றி வினியோகிப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து,  அமைச்சர் வேலுமணி வெள்ளியன்று சென்னையில்  மாநில அளவிலான அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியர் அவர் கூறியதாவது:

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், வீராணம் நீர், நெய்வேலி நீர்ப்படுகையில் புதிய ஆழ்துளைக் கிணறுகள், விவசாயக் கிணறுகளை வாடகைக்கு எடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே சென்னையில் வரும் நவம்பர் மாதம் வரை குடிநீரைத் தடையின்றி வினியோகிப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது.

அதேநேரம் பொது மக்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT