தமிழ்நாடு

காலா -2 திரைப்படம் வர வாய்ப்பு இல்லை: இயக்குநர் பா.ரஞ்சித்

DIN


வரும் காலங்களில் காலா- 2 திரைப்படம் வர வாய்ப்பு இல்லை என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்தார்.
ஆம்பூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் பி-கஸ்பா பகுதியில் நூலகம் மற்றும் இரவு பாடசாலை ஆகியவற்றை வெள்ளிக்கிழமை அவர் திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:   வரும் காலங்களில் காலா- 2 திரைப்படம் வர வாய்ப்பு இல்லை. காலா போன்ற திரைப்படங்கள் வர அதிக வாய்ப்பு இல்லை. ராட்சசி  திரைப்படத்தில் ஜோதிகா நடித்து உள்ளார். அதில் வரும் டிரெய்லர் கூட அம்பேத்கர் புகைப்படத்தை மையப்படுத்தி வெளியீட்டு விழா நடந்துள்ளது. பள்ளிக் கல்வி அவலநிலைகளை வெளிப்படுத்தும் வகையில் அந்த டிரெய்லர் அமைந்துள்ளது என்றார். 
விழாவில் கவிஞர் யாழன் ஆதி, ஊரக வளர்ச்சி துறை கணக்காளர் பிரேம்குமார், மாஸ்டர் பிரான்சிஸ், நீலம் பண்பாட்டு மைய நகரத் தலைவர் சந்திரேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT