தமிழக அரசின் மிரட்டலால் தான் மருத்துவர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது: டிடிவி தினகரன்
தமிழக அரசின் மிரட்டல் காரணமாகவே மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றமச்சாட்டியுள்ளார்.
தமிழக அரசின் மிரட்டல் காரணமாகவே மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றமச்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்தபோது டிடிவி தினகரன் கூறியதாவது:
மருத்துவர்களின் கோரிக்கை நியாயமானது அது நிறைவேற்றப்பட வேண்டும். தமிழக அரசின் மிரட்டல் காரணமாகவே மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது என்று குற்றம்சாட்டினார்,
மேலும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமெரிக்கா செல்வது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளிநாடு செல்வதால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை என்று விமர்சித்தார்.