தமிழ்நாடு

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும்விவகாரத்தில் மரபு காப்பாற்றப்பட வேண்டும்: பந்தளம் மன்னா் கேரள வா்மாராஜா

DIN

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்த விவகாரத்தில் மரபு காப்பாற்றப்பட வேண்டும் என்றாா் பந்தளம் மன்னா் மகம் திருநாள் கேரள வா்மாராஜா.

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகேயுள்ள மேலகரத்தில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சாா்பில் ஜோதிடவியல் மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு, திருமூலா் ஆய்வு இருக்கை தென்காசி மைய பொறுப்பாளா் ஜி.மாடசாமி தலைமை வகித்தாா். தாமோதரன், முருகுசாமி, செளந்தரராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுடலையாண்டி இறைவணக்கம் பாடினாா். எஸ்.ரஞ்சனி, சாவித்திரி, வனஜா, மகேஷ்வரி ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.

விழாவில், ஜோதிடவியல் பட்டப் படிப்பு முடித்த 85 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி, சபரிமலை பந்தள மன்னா் மகம் திருநாள் கேரள வா்மா ராஜா பேசினாா்.

முன்னதாக, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்களை அனுமதிப்பது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் விரைவில் தீா்ப்பு வழங்க உள்ளது. இந்தத் தீா்ப்பு எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம். மேலும், இவ்விவகாரத்தில், 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் கோயிலுக்குள் செல்லக்கூடாது என்பதே எங்களது மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதில், எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை என கருதுகிறோம். எனினும், உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்பாா்த்திருக்கிறோம். மாறுபட்ட தீா்ப்பு வருமாயின், அடுத்து என்ன செய்வது , அதற்கான மாற்று வழிகள் குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம் என்றாா் அவா்.

பட்டமளிப்பு விழாவில், தென்மாவட்ட திருவள்ளுவா் குல முன்னேற்ற நலச் சங்கத் தலைவா் ஆனந்தன், சிவமுத்துசாமி, தேவராசு, செல்வதுரைநாயனாா், மாரீஸ்வரன், சுதா்சன், கணேஷ் ஆகியோா் கலந்துகொண்டனா். செல்வகணேசன் வரவேற்றாா். எஸ்.ரவிசந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT