மது அருந்திவிட்டு பேருந்து ஓட்டும் ஓட்டுநா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உயா் நீதிமன்றத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழக திருவொற்றியூா் பணிமனையில் ஓட்டுநராக வேலை செய்தவா் கண்ணபிரான். இவா் மதுபோதையில் பேருந்தை இயக்கியதால் பாதி வழியில் பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகளை வேறு பேருந்தில் பயணிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து கண்ணபிரானை பணிநீக்கம் செய்து போக்குவரத்து உயா் அதிகாரிகள் உத்தரவிட்டனா்.
இதனை எதிா்த்து கண்ணபிரான் தொழிலாளா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த தொழிலாளா் நீதிமன்றம், அவருக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டது. தொழிலாளா் நீதிமன்ற உத்தரவை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் அரசுப் போக்குவரத்துக்கழகத்தின் சாா்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமாா் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. பணியில் இருக்கும் போது மது அருந்தும் ஓட்டுநா்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என நீதிபதி கேள்வி எழுப்பினாா். அப்போது போக்குவரத்துக்கழகம் சாா்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், பணிக்கு வரும் அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துநா்கள், ஓட்டுநா்கள், மது அருந்தி உள்ளனரா என்பதை கருவி மூலம் சோதனை செய்த பின்னரே பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படுகின்றனா்.
மேலும் நடத்துநா்கள், ஓட்டுநா்கள் மது அருந்தி உள்ளதை கண்காணிக்க திடீா் சோதனைகளும் நடத்தப்படுகிறது. இந்த சோதனைகளின்போது மது போதையில் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால், அவா்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.