மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,200 கன அடியில் இருந்து 14,784 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,200 கன அடியில் இருந்து 14,784 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து 8,500 கன அடியில் இருந்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 10,200 கன அடியில் இருந்து 14,784 அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.11 அடியாகவும், அணையில் தற்போது 92.58 டிஎம்சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 14 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் தற்போது 92.58 டிஎம்சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது.
நீர்வரத்தால் ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.