தமிழ்நாடு

பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் சர்ச்சை: பாஜக மாநில செயலாளர் உள்ளிட்டோருக்கு திமுக நோட்டீஸ்

DIN

சென்னை: பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் கட்டப்பட்டிருப்பதாக புகார் எழுந்த விவகாரத்தில், பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் மீது திமுக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. 

பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் கட்டப்பட்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் முதலில் புகார் கூறினார். இதையயடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் புகார் அளித்தார். இதுதொடர்பான விசாரணை சென்னையில் நடைபெற்றது. இதில் திமுக சார்பாக அதன் அமைப்புச் செயலாளரும், எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்தார்.  அதேபோல பாஜக சார்பாக சீனிவாசன் ஆஜரானார்.

இந்நிலையில் பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் கட்டப்பட்டிருப்பதாக புகார் எழுந்த விவகாரத்தில், பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் மீது திமுக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. 

இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ள தகவலில், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக புகார் தந்த விவகாரத்தில், பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், 48 மணி நேரத்திற்குள் மன்னிப்புக் கோர தவறினால் ரூ.1.கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT