தமிழ்நாடு

சற்று நேரத்தில் சீன அதிபர் வருகை: சென்னையில் போக்குவரத்து நிறுத்தம்! 

சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையை அடுத்து, சென்னையில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. 

DIN

சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையை அடுத்து, சென்னையில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமான மாமல்லபுரத்தில் இன்று மாலை சந்திக்க இருக்கின்றனர். இதற்காக  பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 12 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அதேபோன்று பிற்பகல் 2 மணியளவில் சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னைக்கு வருகை தருகிறார். 

சீன அதிபரின் வருகையையொட்டி, அவர் தங்கவிருக்கும் கிண்டி முதல் விமான நிலையம் வரை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று ராஜிவ் காந்தி சாலையில் மத்திய கைலாஷ் முதல் சோழிங்கநல்லூர் வரையுள்ள சாலையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கிண்டி முதல் சின்னமலை வரை, சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலும் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயின் மத விழாவில் இருந்து ரூ.1 கோடி தங்கக் கலசம் திருட்டு!

வஜீா்பூா் மேம்பாலத்தில் இருந்து விழுந்து இளைஞா் காயம்

ராம்லீலா, துா்கா பந்தல் குழுக்களுக்கு இலவச மின்சாரம்: முதல்வா் அறிவிப்பு!

15 வயது சிறுவனுக்கு கத்தி குத்து: 3 சிறாா்கள் கைது!

காா், ஆட்டோ மோதல்: ஆட்டோ ஓட்டுநா் பலத்த காயம்

SCROLL FOR NEXT