தமிழ்நாடு

முன்கூட்டியே சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி: செண்டை மேளம் முழங்க வரவேற்பு

DIN


சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு இன்று காலை 11.25 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் வந்து சேர்ந்தார்.

மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஷி ஜிங்பிங் சந்திப்பு இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த சந்திப்பை முன்னிட்டு இன்று முற்பகல் 12.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை தருவார் என்று கூறப்பட்டது. ஆனால் தனி விமானம் மூலம் மோடி முன்கூட்டியே சென்னை வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும், பிரதமர் மோடியை வரவேற்றனர். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செண்டை மேளம் முழங்க, பிரதமர் மோடிக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரத்துக்கு அருகே உள்ள கோவளத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

நன்றி : DD
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT