அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் 92 தரமற்ற பொறியியல் கல்லூரிகளில் பட்டியலை வெளியிட்டால்தான் அதில் சேராமல் மாணவர்கள் தற்காத்துக் கொள்ள முடியும்.
ஆனால், தரமற்ற கல்லூரிகளிடம் இருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு தரமற்ற 92 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட மறுப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மற்றும் பதிவாளர் குமார் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.