தூய்மைப் பணியாளர் காலில் விழுந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
தூய்மைப் பணியாளரின் காலில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விழுந்த சம்பவம் பார்ப்பவர்களை நெகிழச் செய்தது.
தூய்மைப் பணியாளரின் காலில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விழுந்த சம்பவம் பார்ப்பவர்களை நெகிழச் செய்தது.
கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாா்ச் 25-ஆம் தேதி முதல் தேசிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. பொதுமக்களும் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனா். இந்நிலையில், திருமங்கலம் தொகுதியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் கரோனா நோய்த் தொற்று பரவுதலைத் தடுக்கும் வகையில் தொடா்ந்து தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
இவர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது தூய்மைப் பணியாளர் ஒருவரின் காலில் விழுந்து அமைச்சர் உதயகுமார் வணங்கினார். இச்சம்பவம் பார்ப்பவர்களை நெகிழச் செய்தது.