சீர்காழி தென்பாதியில் பலத்த காற்றால் மின் கம்பம் முறிவு
நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த கொள்ளிடம், சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து திடீர் மழை பெய்தது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:02 PM
நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த கொள்ளிடம், சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து திடீர் மழை பெய்தது.
அப்போது சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் திருவெண்காடு ஆகிய பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன், ஈரப்பத காற்று வீசியது. இந்த பலத்த காற்றில் சீர்காழி ெதன்பாதி நாதன் நகரில் மின் கம்பம் முறிந்து விழுந்தது.
இதனால் சீர்காழி நகரில் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற மின்வாரிய பணியாளர்கள் மின் இணைப்பை துண்டித்து மற்ற பகுதிகளுக்கு மின் வினியோகம் வழங்கினர்.
Advertisement
தொடர்ந்து முன்கம்பத்தை அகற்றி புதிய மின் நடும் பணியில் ஈடுப்பட்டுளனர்.