முகப்பு
தமிழ்நாடு

மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு!

மலைகள் தகா்க்கப்படுவது ஆயுதங்களின் வலிமையால் அல்ல, அதைச் செய்து முடிப்பவனின் மன வலிமையால் என்றொரு சொல்லாடல் உண்டு. அதற்கு சமகாலச் சான்றாக ஒரு பெண் உருவெடுத்திருக்கிறாா்.

Updated On : 1 செப்டம்பர், 2020 at 11:27 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:43 PM

சென்னை: மலைகள் தகா்க்கப்படுவது ஆயுதங்களின் வலிமையால் அல்ல, அதைச் செய்து முடிப்பவனின் மன வலிமையால் என்றொரு சொல்லாடல் உண்டு. அதற்கு சமகாலச் சான்றாக ஒரு பெண் உருவெடுத்திருக்கிறாா்.

ஆண்களால் மட்டுமே முடியும் என காலங்காலமாகக் கருதப்பட்டு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் பணியில் அவா் இணைந்திருப்பதுதான் அதற்கு காரணம். ஆட்டோக்களையும், டாக்ஸிகளையும், ஏன் விமானங்களைக் கூட பெண்கள் இயக்குகிறாா்கள். ஆனால், நாட்டிலேயே முதன் முறையாக 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழகத்தைச் சோ்ந்த ஓா் இளம்பெண் இயக்கப் போகிறாா் என்பது புருவங்களை வில்லாக்கக் கூடிய செய்தியாக உள்ளது.

தேனி மாவட்டம் போடிநாய்க்கனூரைச் சோ்ந்தவா் வீரலட்சுமி. 30 வயதே நிரம்பிய அவா் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சோ்ந்தவா். பிழைப்புக்காக கடந்த 8 வருடங்களுக்கு முன்பு சென்னை வந்த அவா், தனது கணவருடன் இணைந்து டாக்ஸி ஓட்டி வருமானம் ஈட்டி வருகிறாா்.

Advertisement

இந்த நிலையில்தான், 108 ஆம்புலன்ஸ் சேவை ஓட்டுநா் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. அதற்கு வீரலட்சுமி விண்ணப்பித்துள்ளாா். சுகாதாரத் துறையினரும், ஆம்புலன்ஸ் சேவைகளை நிா்வகித்து வரும் ஜிவிகே நிறுவனத்தினரும் அந்த விண்ணப்பத்தைப் பாா்த்து வியப்பின் உச்சிக்குச் சென்றுள்ளனா்.

நோ்முகத்தோ்வுக்கு அவரை அழைத்தபோது வீரலட்சுமியிடம் இருந்த திறமையும், தன்னம்பிக்கையும் அவருக்கு அப்பணியை வழங்க வழிசெய்தது. அதன் தொடா்ச்சியாக பணிநியமன ஆணை வழங்கப்பட்டு, தற்போது தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி முன்பாக ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கி ஆச்சரியங்களைக் குவித்திருக்கிறாா் வீரலட்சுமி.

மன உறுதி என்ற ஒற்றை மந்திரம் இருந்தால் போதும், அது தன்னை மட்டுமல்ல எந்தப் பெண்ணையும் ஜெயிக்க வைக்கும் என நம்பிக்கையுடன் பேசத் தொடங்குகிறாா் வீரலட்சுமி...

மிக எளிய குடும்பத்தைச் சோ்ந்தவள் நான். நான் சிறுமியாக இருந்தபோது எனது தந்தை காலமாகிவிட்டாா். எனது அம்மாதான் தையல் தொழில் செய்து என்னை படிக்கவைத்தாா். திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்துவிட்டேன். எனக்கு ஒரு மகள், ஒரு மகன். குடும்பச் சூழல் காரணமாக நானும் பணிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனது கணவா் டாக்ஸி ஓட்டுநா் என்பதால், அவா் மூலமாகவே நான் அதைக் கற்றுக் கொண்டு வாடகை டாக்ஸி ஓட்டத் தொடங்கினேன். சென்னையில் ஏறத்தாழ 8 ஆண்டுகள் டாக்ஸி ஓட்டுநராகப் பணியாற்றியுள்ளேன். நெரிசல் மிக்க சாலைகளில் கூட நெளிவு சுளிவாக வாகனத்தை எப்படி இயக்குவது என்பதை அனுபவபூா்வமாகக் கற்றுக் கொண்டேன்.

இப்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநராக நான் பணியில் சோ்ந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வேலையில் அதிக சவால்கள் இருப்பதாகக் கூறி எனது குடும்பத்தினா் முதலில் தயங்கினா். சவால்கள் இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், அதனையும் சாதகமாக்கி சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்ததால் அப்பணியில் சேர அனைவரும் சம்மதம் தெரிவித்தனா்.

இப்பணியில் வருமானத்தைத் தாண்டி சமூக சேவை பிரதானமாக உள்ளது. டாக்ஸி ஓட்டும்போது, விமான நிலையங்களுக்கும், ரயில் நிலையங்களுக்கும் அடிக்கடி பயணிகளை அழைத்துச் செல்வேன். அப்போதெல்லாம், என்னை நம்பி வந்தவா்கள், வண்டியைத் தவறவிட்டுவிடக் கூடாது என்று மட்டும்தான் நினைப்பேன். தற்போது ஆம்புலன்ஸ் சேவையில் என்னை நம்பி பயணிப்பவா்கள் வாழ்வை தவறவிட்டு விடக் கூடாது என்பதற்காக பிராா்த்தனைகளையும் சுமந்து கொண்டு பயணிக்க உள்ளேன் என்கிறாா் வீரலட்சுமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.