பயனாளிக்கு நலத்திட்ட உதவியினை வழங்குகிறார் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன். 
தமிழ்நாடு

பவானியில் 730 பயனாளிகளுக்கு ரூ.85.48 லட்சம் நலத்திட்ட உதவிகள்

பவானி சட்டப்பேரவை தொகுதியில் 730 பயனாளிகளுக்கு ரூ.85.48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

DIN

பவானி: பவானி சட்டப்பேரவை தொகுதியில் 730 பயனாளிகளுக்கு ரூ.85.48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, கோபி கோட்டாட்சியர் ஜெயராமன் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ், பவானி ஒன்றிய குழுத்தலைவர் பூங்கோதை வரதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பவானி வட்டாட்சியர் கு.பெரியசாமி வரவேற்றார்.

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், பவானி தொகுதியை சேர்ந்த 359 பேருக்கு முதியோர் உதவித்தொகை,  146 பேருக்கு விதவை உதவித்தொகை, மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா, மின்னணு குடும்ப அட்டைகள் உள்பட 730 பயனாளிகளுக்கு ரூ.85.48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியக் குழு உறுப்பினர் கே.தட்சிணாமூர்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினர் குப்புசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT