முகப்பு
இந்தியா

பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி

பிரதமர் மோடியே பீதியில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்...

Updated On : 12 மார்ச், 2026 at 7:32 AM
Rahul Gandhi
பகிர்:

மக்களை பீதியடைய வேண்டாம் என்று கூறும் பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி,

"சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார். ஆனால் முற்றிலும் வேறுபட்ட காரணங்களுக்காக அவர் பீதியில் இருக்கிறார்.

அதானி வழக்கு, எப்ஸ்டீன் ஃபைல்ஸ் உள்ளிட்ட பல காரணங்களால் அவர் பீதியடைந்துள்ளார். மக்களவைக்குள்கூட அவரால் வர முடியவில்லை. ஆனால் அவர் மக்களை பீதியடைய வேண்டாம் என்று சொல்கிறார்" என்றார்.

summary

The PM is saying that there is no need to panic. But the PM himself is panicked: Rahul gandhi

முழு கட்டுரையைப் படிக்க →