தமிழ்நாடு

இன்று ஜெயலலிதாவின் 4-ஆம் ஆண்டு நினைவு தினம்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் சனிக்கிழமை நடைபெறவுள்ளன. சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி 

DIN


சென்னை: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் சனிக்கிழமை நடைபெறவுள்ளன. சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.

கரோனா நோய்த்தொற்று காரணமாக, பேரணியாகச் செல்வது போன்ற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சனிக்கிழமை காலை 10.45 மணியளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோா் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று மலா் வளையம் வைக்க உள்ளனா்.

இதன்பின்பு, மாலையில் ஜெயலலிதாவின் உருவப் படங்களுக்கு முன்பாக அகல் விளக்கு ஏற்ற வேண்டுமென அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT