வீடூர் அணை நிரம்பியதால் 600 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 
தமிழ்நாடு

வீடூர் அணை நிரம்பியதால் திறப்பு: 600 கன அடி நீர் வெளியேற்றம்

விழுப்புரம் மாவட்டம், வீடூர் அணை, தொடர் மழையால் வேகமாக நிரம்பி வருவதை அடுத்து அணையில் இருந்து 600 கன அடி உபரி வெளியேற்றப்பட்டு வருகிறது. 

DIN

விழுப்புரம் மாவட்டம், வீடூர் அணை, தொடர் மழையால் வேகமாக நிரம்பி வருவதை அடுத்து அணையில் இருந்து 600 கன அடி உபரி வெளியேற்றப்பட்டு வருகிறது. 

அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை இரவு 29 அடியாக இருந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை முழு கொள்ளளவான (32 அடியை) எட்டியது.
அணைக்கு வினாடிக்கு 2,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அணை நிரம்பியதை அடுத்து சனிக்கிழமை காலை 5 மணிக்கு அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது.

அணையின் 4,5,6 ஆவது கதவணைகள் வழியாக 600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

வீடூர் அணையின் கதவணைகள் வழியாக வெளியேற்றப்படும் நீர்.

இதையடுத்து அணையின் அருகே உள்ள 12 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மழைக்காலத்தில் தண்ணீர் திறந்துவிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த நீர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வழியாக புதுச்சேரி பத்து கண்ணு, வில்லியனூர் பகுதி வழியாக சென்று கடலில் கலக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக சேலம் மாவட்டச் செயலாளரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை!

ஜெய்ஸ்வால், கில் சதம்: 518 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது இந்திய அணி!

அதிமுக - தவெக கூட்டணி அமைந்தால்.. திருமாவளவன் பேச்சு

அதிமுக - தவெக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி: தொல்.திருமாவளவன்

முதல்முறையாக 10,000 கிராமங்களை இணைத்து கிராம சபை! - மு.க. ஸ்டாலின் பேச்சு

SCROLL FOR NEXT