சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு வழங்கல்
சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:33 PM
சிதம்பரம்: சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் அருகே உள்ள பொன்னன்கோயில் கிராமத்தில் உள்ள ராசாம்பாள் ஆட்சி நடுநிலைப்பள்ளி முகாமில் உள்ள சுமார் 200 நபர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை உணவு (பொங்கல்) மற்றும் மதிய உணவு (எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் , சாம்பார் சாதம்) வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிதம்பரம் ரோட்டரி சங்கத் தலைவர் என்.என்.பாபு, செயலாளர் எஸ்.அரிதனராஜ், முன்னாள் தலைவர் சபேசன் ஆகியோர் பங்கேற்று வழங்கினர்.